அமெரிக்காவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடு செய்து கொள்ள சிறிலங்கா விருப்பம்
அமெரிக்காவுடன் எதிர்காலத்தில் சுதந்திர வர்த்தக உடன்பாடு செய்து கொள்ளப்படும் வாய்ப்புகள் இருப்பதாக சிறிலங்கா நம்புவதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில், நேற்று பாகிஸ்தான் பிரதமருடன் இணைந்து பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
‘இந்த சுதந்திர வர்த்தக உடன்பாட்டைப் பயன்படுத்தி பாகிஸ்தான் போன்ற நாடுகள், சிறிலங்காவை அமெரிக்க சந்தைக்குள் நுழைவதற்கான ஒரு நுழைவாயிலாக பயன்படுத்த முடியும்.
சிங்கப்பூர், சீனா ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடுகளை செய்து கொள்ளும் நம்பிக்கையில் சிறிலங்கா இருக்கிறது.
அத்துடன் சுதந்திர வர்த்தக உடன்பாடு அல்லது, விரிவான முன்னுரிமை வர்த்தக உடன்பாடு என்று ஏதோ ஒரு வடிவத்தில் அமெரிக்காவுடன் வர்த்தக உடன்பாடு ஒன்றுக்குள் நுழைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
பாகிஸ்தானுடனான வர்த்தகம், மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளுக்குள் சிறிலங்கா காலடி எடுத்து வைப்பதற்கு உதவும்” என்றும் சிறிலங்கா பி்ரதமர் தெரிவித்துள்ளார்.