மேலும்

மூத்த இராஜதந்திரியைக் கொழும்புக்கு அனுப்புகிறது இந்தியா

India-emblemஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வு விடயங்கள் தொடர்பாக, ஆராய்வதற்கும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கும், மூத்த இராஜதந்திரி ஒருவரை சிறிலங்காவுக்கு அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா அரசியல் வட்டாரங்களில் இருந்து கசியும் தகவல்களின் அடிப்படையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து ஆய்வு செய்வது இந்திய இராஜதந்திரியின் பயணத்தின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது.

அத்துடன், இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர், பிரதமர் உள்ளிட்டோரையும் சந்திக்கும், இந்திய இராஜதந்திரி, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாகவும், பேச்சுக்களை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், சிறிலங்காவுக்கு இந்தியா அனுப்பவுள்ள இந்திய இராஜதந்திரி யார் என்பது குறித்தோ, அவரது பயணம் எப்போது இடம்பெறும் என்பது குறித்தோ இதுவரை அதிகாரபூரி்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *