மேலும்

Tag Archives: இனப்பிரச்சினை

எமது தீர்வு யோசனைக்கு பதிலளிக்கப் பயந்தே பேச்சுக்களை முறித்தார் மகிந்த – சம்பந்தன் குற்றச்சாட்டு

நாங்கள் முன்வைத்த, இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட யோசனைகளுக்குப் பதிலளிக்கப் பயந்தே பேச்சு மேசைக்கு வராமல் மகிந்த தரப்பினர் பின்வாங்கினர் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு சமஷ்டி மூலம் தீர்வு கிடைக்காது – சிறிலங்கா பிரதமர்

இனப்பிரச்சினைக்கு சமஷ்டியின் மூலம் தீர்வு காண முடியாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

போரினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை மதிப்பீடு செய்ய வேண்டும்- லக்ஸ்மன் கிரியெல்ல

சிறிலங்காவில் மூன்று பத்தாண்டுகளாக நீடித்த போரினால் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட சரியான இழப்புகள் இன்னமும் மதிப்பீடு செய்யப்படவில்லை என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு எதிராக ஜெனீவாவில் ஆதரவு திரட்டும் புலம்பெயர் அமைப்புகள்

ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் சிறிலங்காவிற்கு எதிராக ஆதரவுகளைத் திரட்டும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

அதிகபட்ச அதிகாரப்பகிர்வை வழங்குமாறு சிறிலங்காவிடம் இந்தியா கோரிக்கை

எல்லா இலங்கையர்களினதும் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், அதிகபட்ச அதிகாரப்பகிர்வு வழங்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மூத்த இராஜதந்திரியைக் கொழும்புக்கு அனுப்புகிறது இந்தியா

ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வு விடயங்கள் தொடர்பாக, ஆராய்வதற்கும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கும், மூத்த இராஜதந்திரி ஒருவரை சிறிலங்காவுக்கு அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு கூட்டமைப்புடன் பேச்சுக்களைத் தொடங்கி விட்டோம் – ஜப்பானில் ரணில்

அரசியல் தீர்வு காண்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் ஏற்கனவே  பேச்சுகளை ஆரம்பித்து விட்டதாக நேற்று ஜப்பானிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய  சிறப்புரையில் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

ஜெனிவா தொடர்பாக பொது நிலைப்பாடு – உடன்பாட்டில் கையெழுத்திடவும் ஐதேக, சுதந்திரக் கட்சி முடிவு

ஐ.நா மனித உரிமைகள் பேரவை விவகாரங்கள் தொடர்பாக, தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள ஐதேகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுவான இணக்கப்பாடு ஒன்றை எட்டவுள்ளதுடன் இதுபற்றிய புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றையும் செய்து கொள்ளவுள்ளன.

இனப்பிரச்சினைத் தீர்வு தேர்தல் முடிவுகளிலேயே தங்கியுள்ளது – நெருக்கடிக்கான அனைத்துலக குழு

சிறிலங்காவில் எதிர்வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தே, இனப்பிரச்சினைக்கான நிலையான தீர்வு குறித்த தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று நெருக்கடிக்கான அனைத்துலக குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமஸ்டியை நிராகரித்தால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் வாழமுடியாது – மாவை சேனாதிராசா

வடக்கு,கிழக்கு இணைந்த சமஸ்டி முறையில் அதிகாரங்களைப் பகிரும், அரசியல்தீர்வு கிடைக்காவிட்டால், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்கள் வாழ்வது கேள்விக்குறியாகி விடும் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராசா.