மேலும்

வெளியான முடிவுகளில் பிரதான கட்சிகளுக்கிடையே இழுபறி நிலை

unp-upfaசிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின் அடிப்படையில், ஐதேக கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ள போதிலும், முக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே கூடுதலான ஆசனங்களுடன் இன்னமும் முன்னிலை வகிக்கிறது.

இதுவரை (பி.ப 12.30 மணி) வெளியிடப்பட்டுள்ள முடிவுகளில் இருகட்சிகளுக்கும் இடையில் ஆசனங்களைப் பகிர்ந்து கொள்வதில் கடுமையான இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

ஐதேக இதுவரை 4,273,682 வாக்குகளைப் பெற்று 44 ஆசனங்களை மட்டும் கைப்பற்றியிருக்கிறது. ஐதேக பெற்றுள்ள வாக்குகள் 45.27% ஆகும்.

அதேவேளை, 4,096,234 வாக்குகளைப் பெற்று 46 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி.  இந்தக் கட்சிக்கு 43.39% வாக்குகள் கிடைத்துள்ளன.

அதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சி இதுவரை 10 ஆசனங்களையும், ஜேவிபி 464,577 வாக்குகளுடன் 2 ஆசனங்களையும், ஈபிடி பி 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *