மேலும்

மகிந்த ஆதரவாளர்களைக் களையெடுக்கத் தொடங்கினார் மைத்திரி

maithriசிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர்களைக் களையெடுக்கும் அதிரடி நடவடிக்கையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இறங்கியுள்ளார்.

இதன்படி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் பந்துல குணவர்த்தன, ரி.பி.எக்கநாயக்க, சாலிந்த திசநாயக்க, எம்.எம்.சந்திரசேன ஆகியோர் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற முறையில், அதிபர மைத்திரிபால சிறிசேன இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவை மீண்டும் தீவிர அரசியலுக்குக் கொண்டு வருவதற்காக வெளிப்படையான முயற்சிகளில் ஈடுபட்டவர்களே இவர்களாவர்.

மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக அவருக்கு நெருக்கமான முத்தெட்டுவே ஆனந்த தேர்ர் நடத்திய அதிஸ்டான பூஜையில், பந்துல குணவர்த்தனவும் பங்கேற்றிருந்தார்.

அதேவேளை, சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் இருந்து நீக்கப்பட்ட, எஸ்.எம்.சந்திர சேன மற்றும் ரி.பி. எக்கநாயக்க ஆகியோரும் மகிநத ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள் என்பதுடன்,  கண்டியில் நடத்தப்பட்ட கூட்டத்திலும் இவர்கள் பங்கேற்றிருந்தனர்.

சாலிந்த திசநாயக்க அண்மையில் குருநாகலில் நடந்த கூட்டத்தில் முன்னார் அதிபர் சந்திரிகாவை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவானவர்கள் பலம் பெறத் தொடங்கியுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேன இந்த திடீர் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *