மேலும்

அமெரிக்கா அதிபர் ஒபாமாவும் சிறிலங்கா வருவதற்கு வாய்ப்பு –வொசிங்டனில் இருந்து தகவல்

obamaஅமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி சிறிலங்காவுக்கு விரைவில் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் கூட, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதாக, வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குத் தகவல் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர,

“அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி கூடிய விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக, வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் தகவல் அனுப்பியுள்ளது.

மேலதிகமாக, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூட சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலை அடுத்து  ஏற்பட்ட ஆட்சிமாற்றம் மட்டுமல்ல.

அரசியலமைப்பு மாற்றங்களுடன் ஜனநாயகம் திரும்பியமை, நல்லாட்சி, திட்டமிடப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல்கள் ஆகியன, அமெரிக்க உயர் பிரமுகர்களின் சிறிலங்காவுக்கான பயணங்களை ஊக்குவிப்பதில் முக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *