மோடியின் வடக்குப் பயணம் ஆரம்பம் – அனுராதபுரத்தில் வழிபாடு
சிறிலங்காவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றுகாலை வடபகுதிக்கான தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இன்று காலை கொழும்பில் இருந்து இந்திய விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம், புறப்பட்ட அவர் முதலில் அனுராதபுரம் சென்றார்.
அங்கு அவர் சிறிமாபோதியில் வழிபாடுகளை மேற்கொண்டார்.
சிறிமாபோதியில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், இந்தியப் பிரதமருடன் இணைந்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அதையடுத்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமன்னார் நோக்கி உலங்குவானூர்தி மூலம் புறப்பட்டுச் சென்றுள்ளார்.