புதுடெல்லியில் பேச்சுக்களைத் துவங்கினார் மைத்திரி
இந்தியாவுக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன புதுடெல்லியில் இன்று தனது இராஜதந்திரப் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளார்.
இன்று காலை 10 மணியளவில், குடியரசுத் தலைவர் மாளிகையில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்குபற்றியதுடன், முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
அதையடுத்து, ராஜ்கார்ட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்குச் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர், தான் தங்கியிருந்த ஐரிசி மௌரியா விடுதியில், சிறிலங்கா அதிபரை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சந்தித்தார்.
காலை 11.05 மணியளவில் ஆரம்பமான சந்திப்பு இடம்பெற்று வருகிறது.
இந்தச் சந்திப்பையடுத்து அவர் ஹைதராபாத் இல்லத்துக்குச் சென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
முதற்கட்டமாக. மதியம் 12.15 மணியளவில், தனித்தனியான பேச்சுக்கள் இடம்பெறும்.
பிற்பகல் 1 மணியளவில், தூதுக்குழுவினருடன் இணைந்து பேச்சுக்கள் இடம்பெறவுள்ளன.
முஸ்லிம் மற்றும் தமிழர்களுக்கு ஒரு குரல் https://www.facebook.com/Serendibmedia