மோடியுடன் தனியாகப் பேச்சுக்களைத் துவங்கினார் மைத்திரி
புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனியான பேச்சுக்களை ஆரம்பித்துள்ளார்.
ஹைதராபாத் இல்லத்தில் பிற்பகல் 12.150 மணியளவில் இந்தச் சந்திப்பு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
இதன் போது, நான்கு உடன்பாடுகள் குறித்துப் பேசப்பட்டு வருவதாகவும், பொரளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்துப் பேசப்படுவதாகவும், இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் தெரிவித்தார்.
இருதலைவர்களும் தனியாக நடத்தும் பேச்சுக்களை அடுத்து, தூதுக்குழுக்களுடன் இணைந்து பேச்சுக்களில் பங்கெடுக்கவுள்ளனர்.