மேலும்

சல்மான் கான் வீட்டுக்கு முன்பாக தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

mumbai-protestசிறிலங்கா அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பரப்புரை செய்த ஹிந்தி நடிகர் சல்மான் கானின் வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு முன்பாக கூடிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள், சல்மான் கானுக்கு எதிராகவும், மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும், முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து போராட்டம் நடத்திய சிலரை மும்பை காவல்துறையினர் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

mumbai-protest

நடிகர் சல்மான் கானும், நடிகை ஜாக்குலின் பெர்னான்டசும் அண்மையில், கொழும்பு சென்று, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *