வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பணிகளை துவக்கினர்
வரும் வியாழக்கிழமை சிறிலங்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலைக் கண்காணிக்க வந்துள்ள வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் நேற்று தமது பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆசிய மற்றும் கொமன்வெல்த் கண்காணிப்பாளர்கள் ராஜகிரியவில் உள்ள சிறிலங்கா தேர்தல் திணைக்களத்தில், தேர்தல் ஆணையாளரை இவர்கள் நேற்று சந்தித்து பேசினர்
இதையடுத்து தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் புறப்பட்டுச் சென்றனர்.
வெளிநாட்டு கண்காணிப்பாளர் குழுவில் இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர் குரேசியும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.