3 பிரதியமைச்சர்கள், 4 இராஜாங்க அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம்
சிறிலங்காவில் அண்மையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவிகளிலும் சற்று முன்னர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களான ஹர்ஷ டி சில்வா, ஏரான் விக்கிரமரத்ன, வசந்த சேனநாயக்க, ரஞ்சன் ராமநாயக்க, பாலித ரங்க பண்டார, கருணாரத்ன பரணவிதான, லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகியோர் புதிய பதவிகளை ஏற்றுள்ளனர்.
பிரதி வெளிவிவகார அமைச்சராக இருந்த ஹர்ஷ டி சில்வா, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
பொது நிறுவனங்கள் அபிவிருத்தி பிரதி அமைச்சராக இருந்த ஏரான் விக்கிரமரத்ன , நிதி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிவிவகார இராஜாங்க அமைச்சராக வசந்த சேனநாயக்க பொறுப்பேற்றுள்ளார்.
பாலித ரங்க பண்டார நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சராகவும், லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன பொது நிறுவனங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கண்டிய மரபுரிமைகள் பிரதியமைச்சர் பதவி மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது.
கருணாரத்ன பரணவிதான தொழிற்பயிற்சி பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.