மேலும்

Archives

நீர்க்காகம் போர்ப் பயிற்சி தொடங்கியது – 69 வெளிநாட்டு படையினரும் பங்கேற்பு

சிறிலங்கா இராணுவம் நடத்தும் ‘நீர்க்காகம் பயிற்சி- VIII – 2017’  மின்னேரியாவில் உள்ள காலாட்படைப் பயிற்சி மையத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

போர்க்குற்றவாளிகளுக்கு ஒரு எச்சரிக்கை சமிக்ஞை

பிரேசிலுக்கான சிறிலங்கா தூதுவர் ஜெகத் ஜயசூரிய  கடந்த செவ்வாய் அதிகாலை தனது நாட்டிற்குத் திரும்பியுள்ளார். ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே இவர் சிறிலங்காவிற்குத் திரும்பியதாக சிறிலங்கா அரசாங்கம் பின்னர் அறிவித்தது. இவரது தூதுவர் பதவிக் காலம் முடிவடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டாலும் கூட, ஜெகத் ஜயசூரிய சிறிலங்காவிற்குத் திரும்பி வந்த காலப்பகுதியானது இது தொடர்பில் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

சம்பந்தனைப் பாராட்டிய அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர்

பிரதான கொள்கையில் நீங்கள் உறுதியாக இருக்கின்றீர்கள்  என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ்,  பாராட்டியுள்ளார்.

டிசெம்பருக்குள் புதிய அரசியலமைப்பு – இந்தியா, அமெரிக்காவிடம் சிறிலங்கா அதிபர் வாக்குறுதி

இந்த ஆண்டு இறுதிக்குள், புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்காவிடமும், இந்தியாவிடமும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் – சம்பந்தனிடம் சுஷ்மா வாக்குறுதி

புதிய அரசியலமைப்பை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தியா தேவையான அழுத்தங்களை கொடுக்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்துள்ளார்.

அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையில் முதலாவது கூட்டுப் பயிற்சி திருகோணமலையில்

அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையில் முதலாவது, கடற்படைப் பயிற்சி வரும் ஒக்ரோபர் மாதம் திருகோணமலையில் இடம்பெறவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

நாம் எமது உரிமைகளை இழந்து விட்டோம் – அமெரிக்க பதில் உதவிச்செயலரிடம் சம்பந்தன்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் நேற்றுக்காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

கடல் பாதைகளின் பாதுகாப்பு- சிறிலங்கா கடற்படையின் பங்கு என்ன?

சிறிலங்காவின் புதிய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவின் பதவியேற்பானது முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக இவர் தனது முதலாவது பத்திரிகையாளர் மாநாட்டில்  இவர்  ‘ஏடன் வளைகுடாவிற்கும் மலாக்கா நீரிணைக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளைப் பாதுகாத்தல்’ என்பது எதிர்காலத்தில் சிறிலங்கா கடற்படையின் பிரதான வேலைத்திட்டமாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் அமெரிக்காவின் பதில் உதவிச் செயலர் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவிச்செயலர் அலிஸ் வெல்ஸ் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு நடத்தினார்.

சிறிலங்கா அதிபர், பிரதமருடன் சுஸ்மா தனித்தனியாக பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.