மேலும்

Tag Archives: புங்குடுதீவு

யாழ். நீதிமன்றப் பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட 127 பேர் கைது- மீண்டும் இராணுவ ரோந்து

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, யாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

போர்க்களமானது யாழ். நீதிமன்ற வளாகம் – கல்வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச்சூடு

யாழ்.நீதிமன்ற வளாகத்தைச் சூழ்ந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், நீதிமன்றத்தின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதையடுத்து, சிறிலங்கா காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும், அவர்களை கலைத்தனர்.

மாணவி வித்தியா படுகொலைக்கு எதிரான போராட்டங்களால் முற்றாக முடங்கியது குடாநாடு

புங்குடுதீவு மாணவி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு உச்சத் தண்டனையை பெற்றுக்கொடுக்க வலியுறுத்தியும், நடத்தப்படும் பொதுமக்களின் போராட்டங்களினால் யாழ். குடாநாடே இன்று செயலிழந்து போயுள்ளது.

வித்தியா படுகொலைக்கு எதிரான போராட்டங்களால் கொந்தளிக்கிறது குடாநாடு

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தப்பவிடும் முயற்சிகளைக் கண்டித்தும் நடத்தப்பட்ட போராட்டங்களால் யாழ்.குடாநாட்டில் இன்று பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி கொலையுடன் தொடர்புடைய மேலும் 5 பேர் கைது – தீவகத்தில் பெரும் பதற்றம்

புங்குடுதீவில் பாடசாலை மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்றுமாலை மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களைத் தம்மிடம் ஒப்படைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தீவகத்தில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டது.