படை அதிகாரிகளை இடைநிறுத்த வேண்டும் – காணாமல் போனோர் பணியகம் பரிந்துரை
ஆட்கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட, படை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளை பணியில் இருந்து இடைநிறுத்த வேண்டும் என்று காணாமல் போனோருக்கான பணியகம் சிறிலங்கா அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.