மேலும்

கோத்தா மீதான வழக்குகள் – வெளியாகும் குழப்பமான தகவல்கள்

கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் பகிரங்க பதிவேட்டில் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அகிம்சா விக்ரமதுங்க தாக்கல் செய்துள்ள வழக்குத் தொடர்பான எந்த ஆதாரங்களும் இல்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கோத்தாவுக்கு எதிரான வழக்கு – உறுதிப்படுத்தினார் பீரிஸ்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் அகிம்சா விக்ரமதுங்கவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறிலங்கா படையினருக்கு மேலதிக பயிற்சி வாய்ப்பு – இந்தியாவிடம் கோரினார் மைத்திரி

சிறிலங்கா படையினருக்கு இந்தியாவில் மேலதிக பயிற்சி வாய்ப்புகளை வழங்குமாறு இந்திய பாதுகாப்புச் செயலர் சஞ்ஜய் மித்ராவிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

கோத்தாவுக்கு எந்த நீதிமன்ற அறிவித்தல்களும் கிடைக்கவில்லை – நாமல்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பான எந்த அறிவித்தல்களும் அவருக்கு வழங்கப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்திய- சிறிலங்கா பாதுகாப்பு கலந்துரையாடல் – ஒத்துழைப்பு விரிவாக்கம் குறித்து ஆலோசனை

ஆறாவது கட்ட இந்திய – சிறிலங்கா பாதுகாப்பு கலந்துரையாடல் நேற்று கொழும்பில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

‘மித்ரசக்தி-6’ கூட்டுப் பயிற்சி நிறைவு

இந்திய- சிறிலங்கா இராணுவத்தினருக்கு இடையில் இரண்டு வாரங்களாக நடந்து வந்த ‘மித்ரசக்தி’ கூட்டுப் பயிற்சி நேற்று நிறைவடைந்தது.

கோத்தாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக அவருக்கு நேற்றிரவு எழுத்துமூல அறிவிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.  

அம்பாந்தோட்டையின் பாதுகாப்பு சீனாவிடம் வழங்கப்படாது சிறிலங்கா திட்டவட்டம்

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு மற்றும் செயற்பாடுகள் எந்தவொரு நாட்டுக்கும் வழங்கப்படாது, அதனை சிறிலங்காவே கையாளும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

முன்னாள் போராளிகளுடன் அமெரிக்க உயர் அதிகாரிகள் பேச்சு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று கடந்த வாரம், விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலையில் இந்திய கடற்படையின் அதிவேக தாக்குதல் கப்பல்

இந்திய கடற்படையின் அதிவேக நீருந்து தாக்குதல் படகான INS Cora Divh இரண்டு நாட்கள் பயணமாக நேற்று திருகோணமலை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது.