மேலும்

செய்தியாளர்: Vanni

நந்திக்கடலில் மில்லியன்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கின

முல்லைத்தீவு- வட்டுவாகல் பகுதியில் மில்லியன் கணக்கான மீன்கள் இறந்து கரையொதுங்கியுள்ளன. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.

முள்ளிவாய்க்கால் தேவாலயம் அருகே நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட எட்டாவது ஆண்டு நினைவு நாளான இன்று, முள்ளிவாய்க்கால் கிழக்கு தேவாலயம் அருகே, நினைவு நிகழ்வுகளை நடத்துவதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிறிலங்கா படையினர் வசமுள்ள பண்ணைக் காணிகளை விடுவிக்கக் கூடாது – கிளிநொச்சியில் பேரணி

வடக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இன்று முக்கிய கூட்டம் நடைபெறும் நிலையில், கிளிநொச்சியில் சிறிலங்கா படையினர் வசமுள்ள பண்ணைக் காணிகளை விடுவிக்கக் கூடாது என்று கோரி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

முள்ளிக்குளத்தில் போராட்டம் நடத்தும் மக்களுடன் அனைத்துலக மன்னிப்பு சபை செயலர் சந்திப்பு

முள்ளிக்குளத்தில் சிறிலங்கா கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, தாம் பூர்வீகமாக வாழ்ந்து வந்த நிலங்களை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்தி வரும் அப்பகுதி மக்களை அனைத்துலக மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம், சலில் ஷெட்டி நேற்று சந்தித்துப் பேசினார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை காப்பாற்ற முனைந்த அரச சட்டவாளர்

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னர் சிறிலங்கா இராணுவத்தின் 58ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நீதிமன்றத்துக்கு அழைப்பது தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

முள்ளிவாய்க்காலில் மலர்வளையம் வைத்து வணக்கம் செலுத்தினார் ரொரன்ரோ மாநகர முதல்வர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள கனடாவின் ரொரன்ரோ மாநகர முதல்வர் ஜோன் ரொறி, இறுதிப்போரில் உயிரிழந்தவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் வணக்கம் செலுத்தினார்.

ஜெனிவா தீர்மானத்தை கடும் கண்காணிப்புடன் நடைமுறைப்படுத்தக் கோருகிறது கூட்டமைப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக சிறிலங்கா நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துமாறும், அதனைக் கண்காணிக்க சிறிலங்காவில் பணியகம் ஒன்றை நிறுவுமாறும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

கேப்பாப்பிலவில் 42 ஏக்கர் காணிகள் விடுவிப்பு – மக்களின் தொடர் போராட்டம் வெற்றி

முல்லைத்தீவு – கேப்பாபிலவு விமானப்படைத் தளத்தினுள் உள்வாங்கப்பட்டிருந்த பொதுமக்களின் 42 ஏக்கர் காணிகள் இன்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

‘விமானப்படையின் காணி’ , ‘நுழைந்தால் சூடு’ – கேப்பாப்பிலவு மக்களுக்கு எச்சரிக்கை

தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்கள் இன்று 19ஆவது நாளாகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்தக் காணிகள் தமக்கே சொந்தம் என்றும், அதற்குள் நுழைந்தால் சுடப்படுவீர்கள் என்றும் சிறிலங்கா விமானப்படை எச்சரித்துள்ளது.

இரண்டு வாரங்களைத் தாண்டியும் தொடரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் (படங்கள்)

சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகளை மீள ஒப்படைக்கக் கோரி முல்லைத்தீவில் கேப்பாப்பிலவு மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று 14ஆவது நாளை எட்டியுள்ளது.