மேலும்

செய்தியாளர்: Vanni

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் – சிறிலங்கா படைச் சிப்பாய் கைது

கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் சிறிலங்கா காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எவ் கட்சியின் பொதுச்செயலருமான சிவசக்தி ஆனந்தன், வவுனியா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

சிங்கள- தமிழ் மாணவர்களுக்கிடையில் முரண்பாடு- வவுனியா வளாகம் மூடப்பட்டது

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் சிங்கள- தமிழ் மாணவர்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டதையடுத்து, வளாகம் இழுத்து மூடப்பட்டுள்ளது.

முன்னாள் போராளிகளின் பெயரில் புதியதொரு கட்சி ஆரம்பம்

கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளின் சார்பில் புதிய அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய ஜனநாயக போராளிகள் கட்சி என்ற பெயரில், இந்தக் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.

வட மாகாணசபை அமைச்சர் டெனீஸ்வரனை கட்சியில் இருந்து இடைநிறுத்தியது ரெலோ

அமைச்சர் பதவியில் இருந்து விலக மறுத்து வரும், வடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரனை, தமது கட்சியில் இருந்து ஆறு மாதங்களுக்கு இடை நிறுத்தி வைப்பதாக, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அறிவித்துள்ளது.

நந்திக்கடலில் மில்லியன்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கின

முல்லைத்தீவு- வட்டுவாகல் பகுதியில் மில்லியன் கணக்கான மீன்கள் இறந்து கரையொதுங்கியுள்ளன. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.

முள்ளிவாய்க்கால் தேவாலயம் அருகே நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட எட்டாவது ஆண்டு நினைவு நாளான இன்று, முள்ளிவாய்க்கால் கிழக்கு தேவாலயம் அருகே, நினைவு நிகழ்வுகளை நடத்துவதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிறிலங்கா படையினர் வசமுள்ள பண்ணைக் காணிகளை விடுவிக்கக் கூடாது – கிளிநொச்சியில் பேரணி

வடக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இன்று முக்கிய கூட்டம் நடைபெறும் நிலையில், கிளிநொச்சியில் சிறிலங்கா படையினர் வசமுள்ள பண்ணைக் காணிகளை விடுவிக்கக் கூடாது என்று கோரி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

முள்ளிக்குளத்தில் போராட்டம் நடத்தும் மக்களுடன் அனைத்துலக மன்னிப்பு சபை செயலர் சந்திப்பு

முள்ளிக்குளத்தில் சிறிலங்கா கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, தாம் பூர்வீகமாக வாழ்ந்து வந்த நிலங்களை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்தி வரும் அப்பகுதி மக்களை அனைத்துலக மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம், சலில் ஷெட்டி நேற்று சந்தித்துப் பேசினார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை காப்பாற்ற முனைந்த அரச சட்டவாளர்

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னர் சிறிலங்கா இராணுவத்தின் 58ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நீதிமன்றத்துக்கு அழைப்பது தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.