மேலும்

செய்தியாளர்: Vanni

சிறிலங்காவுக்கு அனைத்துலகம் நெருக்குதல் கொடுக்க வேண்டும் – விக்னேஸ்வரன் அறைகூவல்

என்றோ ஒரு நாள் அனைத்துலக சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும், இந்த இனப்படுகொலைக்கு நீதி வழங்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே இந்த மண்ணில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பொறுமையுடன் காத்து நிற்கின்றனர் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இரணைதீவில் மீளக்குடியமர அனுமதி – 8 ஏக்கர் காணிகளை விடுவிக்க கடற்படை மறுப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைதீவில், 8 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிக்க மறுப்புத் தெரிவித்துள்ள சிறிலங்கா கடற்படை, ஏனைய பகுதிகளில் பொதுமக்கள் மீளக் குடியமர அனுமதி அளித்துள்ளது.

காணாமல் போனோருக்கான பணியகத்தின் மீது அவநம்பிக்கை வெளியிட்ட உறவினர்கள்

காணாமல் போனோருக்கான பணியகம், மன்னாரில் நேற்று, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் முதலாவது கலந்துரையாடலை நடத்தியது.

வவுனியா வளாகத்தில் புத்தர் சிலை வைக்கும் முயற்சியால் பதற்றம்

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் புத்தர் சிலை ஒன்றை நிறுவன சிங்கள மாணவர்கள் எடுத்த முயற்சியை அடுத்து. ஏற்பட்ட பதற்ற நிலையால், வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

இரணைதீவில் தங்கியிருந்து நிலமீட்புப் போராட்டம் நடத்தும் மக்கள்

சிறிலங்கா கடற்படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள இரணைதீவில் உள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவித்து, மீளக்குடியேற அனுமதிக்கக் கோரி, இரணைதீவு மக்கள் நேற்று படகுகள் மூலம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பயிற்சி முகாமில் மயங்கிய 19 சிறிலங்கா படையினரில் இருவரின் நிலை கவலைக்கிடம்

வவுனியா- பம்பைமடு சிறிலங்கா இராணுவப் பயிற்சி முகாமில் நேற்று நண்பகல் திடீர் சுகவீனமடைந்த 19 படையினர் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு பிரதேச சபைகளை கைப்பற்றியது கூட்டமைப்பு

வவுனியா வடக்கு பிரதேச சபையை ஐதேக மற்றும் சுயேட்சைக் குழுவின் ஆதரவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. இன்று காலை நடந்த வவுனியா வடக்கு பிரதேச சபையின் அமர்வில் புதிய தவிசாளர் தெரிவு  இடம்பெற்றது.

வெங்கலச் செட்டிக்குளத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடம் இழந்தது கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய வவுனியா- வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச சபையின் அதிகாரத்தை, சிறிலங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றியுள்ளது.

சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக வடக்கு மாகாணசபையினர் முல்லைத்தீவில் போராட்டம்

முல்லைத்தீவில் இடம்பெற்று வரும்  சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இன்று கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

வன்னியில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இராணுவப் பயிற்சி

வன்னியில் சிவில் பாதுகாப்புப் படையினால் நடத்தப்படும் முன்பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றுவோருக்கு 20 நாட்கள் இராணுவப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.