கிளிநொச்சியில் அகற்றப்படும் போர் நினைவுச் சின்னம்
கிளிநொச்சியில் போர் நினைவுச் சின்னமாகப் பேணப்பட்டு வந்த, நீர்த்தாங்கி, தற்போது அழிக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது.
கிளிநொச்சி நகர மத்தியில் அமைந்திருந்த நீர்த்தாங்கி, கடந்த 2008ஆம் ஆண்டு இறுதியில் குண்டு வைத்து அழிக்கப்பட்டது.
போர் முடிவுக்கு வந்த பின்னர், போரின் நினைவுச் சின்னமாக இது பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்தது.
சிறிலங்கா அரசினால், போர்ச் சுற்றுலா மையமாகவும் இது பேணப்பட்டது. இங்கு நாளாந்தம் பெருமளவு சிங்கள சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர்.
போர் வடுக்களின் எச்சமாக இருந்த இந்த நீர்த்தாங்கி தற்போது, உடைத்து அகற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.