மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

வடக்கில் புலிகளை நினைவுகூர இடமளியோம் – ருவான் விஜேவர்த்தன

வடக்கில் போரில் இறந்த பொதுமக்களை நினைவு கூருவதற்கு எந்த தடையும் விதிக்கப்படாது என்றும், அதேவேளை, விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கு இடமளிக்கப்படாது என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நல்லிணக்கத்துக்காக பொறுப்புக்கூறலை பேரம் பேசமுடியாது – விக்னேஸ்வரன்

நல்லிணக்கத்துக்காக பொறுப்புக்கூறலைப் பேரம் பேச முடியாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிணையில் விடுவிக்கப்பட்டார் பசில்

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியா புறப்பட்டுச் சென்றார் சிறிலங்கா அதிபர்

லண்டனில் நடைபெறவுள்ள ஊழல் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று பிரித்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

நீண்டநேரம் உரையாடிய மைத்திரி – சம்பந்தன்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுடன் நேற்று நீண்டநேரமாக கலந்துரையாடினார்.

உலக வங்கியின் கறுப்புப்பட்டியலில் உள்ள சீன நிறுவனத்துடன் சிறிலங்கா அரசு உடன்பாடு

கொழும்பு துறைமுக நகரக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும், சீன நிறுவனம், உலக வங்கியால் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோதலில் ஈடுபட்ட இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு வாரகாலம் இடைநிறுத்தம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதல்களுக்குக் காரணமானவர்கள் என்ற குற்றச்சாட்டில், பிரதி அமைச்சர் பாலித தேவாரப்பெருமவும், நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவும், ஒரு வாரகாலம் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு நிறுவன உதவியுடன் திருகோணமலையில் பெருநகர திட்டமிடல் ஆய்வு

திருகோணமலைப் பெருநகரப் பிரதேசத்தில், வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் திட்டமிடல் மீளாய்வு ஒன்றை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

முன்னாள் போராளிகள் கைதுகளின் பின்னணி என்ன? – சிறிலங்கா அரசிடம் கூட்டமைப்பு கேள்வி

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதற்கான காரணங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

தகவல் உரிமைச் சட்டமூலத்தில் திருத்தங்களைக் கோருகிறது உச்சநீதிமன்றம்

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தகவல் உரிமைச் சட்டமூலத்தின் சில பிரிவுகள், அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதால், அவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.