பிரித்தானியா புறப்பட்டுச் சென்றார் சிறிலங்கா அதிபர்
லண்டனில் நடைபெறவுள்ள ஊழல் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று பிரித்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இன்று காலை 10.05 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிறிலங்கா அதிபரும், அவரது குழுவினரும், எமிரேட்ஸ் விமானம் மூலம், பிரித்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
நாளை லண்டனில் நடக்கவுள்ள ஊழல் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கவுள்ள மைத்திரிபால சிறிசேன, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.