தகவல் உரிமைச் சட்டமூலத்தில் திருத்தங்களைக் கோருகிறது உச்சநீதிமன்றம்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தகவல் உரிமைச் சட்டமூலத்தின் சில பிரிவுகள், அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதால், அவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் கருத்தை சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
சட்டமூலத்தின் தற்போதைய வடிவம், அரசியலமைப்புக்கு இசைவானதாக இல்லை என்றும், இதனை மூன்றில் இரண்டு பெருரும்பான்மை வாக்குகளின் மூலமே, நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் கருத்து வெளியிட்டுள்ளது.