மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

மைத்திரியைச் சந்தித்து அனுதாபம் தெரிவித்தார் சீனத் தூதுவர்

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களால் ஏற்பட்டுள்ள உயிர் மற்றும் அழிவுகளுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், சீனா அனுதாபம் தெரிவித்துள்ளது.

பெருக்கெடுத்துப் பாயும் களனி கங்கை – வெள்ளத்தில் மூழ்கும் கொழும்பு நகரப்பகுதிகள் (படங்கள்)

சிறிலங்காவில் கடந்த நான்கு நாட்களாகப் பெய்து வரும் கனமழையால், களனி கங்கையில் நீர்மட்டம் 7 மீற்றர் வரை அதிகரித்து, கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளையும் நீரில் மூழ்கடித்துள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்கச் செயலர் ஆர்மிரேஜ் சம்பந்தனுடன் சந்திப்பு

சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ், நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் கொண்டு வர அமெரிக்கா வலியுறுத்தல்

சிறிலங்காவில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, புதிய தேசிய பாதுகாப்புச் சட்டக் கட்டமைப்பு ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

தமிழர்களைக் கொன்று விட்டு வெற்றிவிழா கொண்டாட முடியாது – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

போரில், எமது சகோதர இனத்தவரான தமிழர்களை கொன்று விட்டு நாம் போர் வெற்றிவிழா கொண்டாட முடியாது என சிறிலங்கா  பாதுகாப்பு செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்தார்.

கச்சதீவு தேவாலயம் இடிக்கப்படாது – சிறிலங்கா கடற்படைத் தளபதி

கச்சதீவில் உள்ள பழைமையான தேவாலயம் இடிக்கப்படாது என்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்திய அழுத்தத்தினால் கச்சதீவு தேவாலய கட்டுமான பணி நிறுத்தப்படவில்லை- சிறிலங்கா கடற்படை

கச்சதீவில் புதிய தேவாலய கட்டுமானப் பணிகள், இந்திய அரசின் அழுத்தத்தினால் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை சிறிலங்கா கடற்படை மறுத்துள்ளது.

அனைத்துலக அழுத்தங்களினால் தான் போர் வெற்றி விழா நிறுத்தம் – பசில் குற்றச்சாட்டு

அனைத்துலக அழுத்தங்களினால் தான், சிறிலங்கா அரசாங்கம் போர் வெற்றி விழாவைத் தவிர்த்திருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

மே 21இற்குப் பின்னர் அமைச்சரவை மாற்றம்

சிறிலங்கா அமைச்சரவை, வரும் மே 21ஆம் நாளுக்குப் பின்னர், மாற்றியமைக்கப்படவுள்ளதாக, நன்கு தகவல் அறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இம்முறை வெசாக் கொண்டாட்டங்களுக்கு பெரியளவில் ஏற்பாடு

இம்முறை யாழ்ப்பாணத்தில் வெசாக் கொண்டாட்டங்களை, பெரியளவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.