மேலும்

பிணையில் விடுவிக்கப்பட்டார் பசில்

Basil-Rajapaksa-FCIDநிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில், கைது செய்யப்பட்டு மாத்தறைக்குக் கொண்டு செல்லப்பட்ட பசில் ராஜபக்ச இன்று பிற்பகல் மாத்தறை பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார்.

இதையடுத்து பசில் ராஜபக்சவை, 50 ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும், தலா 10 மில்லியன்  ரூபா பெறுமதியான மூவரின்  சரீரப் பிணையிலும், செல்வதற்கு நீதிவான் அனுமதி அளித்தார்.

அத்துடன் இந்த வழக்கு ஜூலை 20ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *