யாழ்ப்பாணத்தில் மாவை, சுமந்திரன், சிறீதரன், சித்தார்த்தன், சரா வெற்றி – சுரேஸ் தோல்வி
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் விருப்பு வாக்குகளை எண்ணும் பணி நிறைவுக்கு வந்துள்ள நிலையில், யாழ். மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம் வெளியாகியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில், 5 உறுப்பினர்களும், ஈபிடிபி மற்றும் ஐதேக சார்பில் தலா ஒருவரும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.
இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் –
- சி.சிறீதரன் – 72,058
- மாவை.சேனாதிராசா – 58, 782
- எம்.ஏ.சுமந்திரன் – 58,043
- த. சித்தார்த்தன் – 53,740
- ஈ.சரவணபவன் – 43,289 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவாகியுள்ளனர்.
ஈபிடிபி சார்பில், கே.என்.டக்ளஸ் தேவானந்தாவும், ஐ.தே.க சார்பில் விஜயகலா மகேஸ்வரனும், தெரிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தோல்வியடைந்துள்ளார்.