3 மாதங்களில் ஆறரை இலட்சம் ரூபாவுக்கு சலவை செய்த முன்னாள் பிரதமர் டி.எம்
மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் பிரதமராக இருந்த டி.எம்.ஜெயரட்ண, ஐந்து நட்சத்திர விடுதியில் தமது உடைகளை சலவை செல்வதற்காக, கடந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் மட்டும், சுமார் ஆறரை இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளார்.
இந்த அதிர்ச்சித் தகவலை சிறிலங்காவின் பொருளாதார கொள்கை பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா வெளியிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள சினமன் லேக்சைட் விடுதியில், முன்னாள் பிரதமர் எ.எம். ஜெயரட்ணவின் உடைகளைச் சலவை செய்வதற்கு, கடந்த 2014ஆம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் மட்டும், 632,575 ரூபா (4,600 டொலர்) செலவிடப்பட்டள்ளது.
2014ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 121,000 ரூபாவும், நொவம்பர் மாதம், 25 வீத கழிவுடன், 395,000 ரூபாவும், டிசெம்பர் மாதம் 108,000 ரூபாவும் சலவைக் கட்டமாகச் செலுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் துணிகளை சலவைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் அமைச்சர்களுக்கு சலவை கொடுப்பனவு கிடையாது.
சலவைக் கட்டணமாக செலுத்திய பணத்தைக் கொண்டு, டி.எம். ஜெயரட்ண, ஒவ்வொரு நாளுக்கும் ஒரு புதிய தேசிய உடையை வழங்கியிருக்க முடியும்.
இது ஒன்றும் நகைச்சுவை அல்ல. கடந்த ஆட்சிக்காலத்தில் மக்களின் பணம் எவ்வாறு வீணடிக்கப்பட்டது என்பதை காட்டுகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.