மேலும்

ஸ்காபரோவில் தமிழினப் படுகொலை நினைவகம் – ரொறன்ரோ நகரசபை தீர்மானம்

கனடாவின் ஸ்காபரோ பூங்காவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தை நிறுவுவது குறித்து ஆராய்வதற்கான தீர்மானம், ரொறன்ரோ நகரசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ரொறன்ரோ நகர சபையில், ஸ்கார்பரோ தென்மேற்கு வட்டார உறுப்பினர் பார்த்தி கந்தவேல், இந்த தீர்மானத்தை முன்மொழிந்திருந்தார்.

உறுப்பினர் ஜோஷ் மாட்லோ (Josh Matlow) இதனை வழிமொழிந்தார்.

நகரத்தின் பொது கலை மற்றும் நினைவுச்சின்ன நன்கொடை கொள்கைக்கு ஏற்ப, பொருத்தமான இடத்தை அடையாளம் காணவும், திட்டத்தை உருவாக்கவும் தமிழ் சமூக அமைப்புகளுடன் ஒத்துழைக்குமாறு ரொறன்ரோ நகரத்தைக் கோரும் வகையில் இந்த தீர்மானம் அமைந்துள்ளது.

இந்த தீர்மானம் ஒருமனதமாக நிறைவேற்றப்பட்டுள்ளதை நகர சபை உறுப்பினர் பார்த்தி கந்தவேல் வரவேற்றுள்ளார்.

நாம் இழந்தவர்களின் நினைவை மதிக்கவும், அவர்களின் கதைகள் மறக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் இது ஒரு முக்கிய படியாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்மானம் தொடர்பாக, 2025 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில்,  அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளுடன் ரொறன்ரோ நகரசபை அறிக்கை அளிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *