மேலும்

உச்சநீதிமன்ற வாசற்படியில் தடுக்கி விழுந்த மகிந்த

mahinda-fall downசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச உச்சநீதிமன்ற வாசற்படியில், தடுக்கி விழுந்த நிலையில், அருகில் இருந்து உதவியாளர்கள் தாங்கிப் பிடித்ததால், காயங்களின்றித் தப்பினார்.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் காலை உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றது.

உச்சநீதிமன்றத்தில் புதிய சட்டவாளர்களுக்கான உறுதிமொழியேற்பு நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இதில், மகிந்த ராஜபக்சவின், பெறாமகளும் சட்டவாளராக உறுதிமொழியேற்றுக் கொண்டார்.

mahinda-fall down

இந்த நிகழ்வில், ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த, மகிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டோர் குடும்பத்துடன் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது உச்சநீதிமன்ற வாசற்படியில் கால்வைத்து ஏறிய போது மகிந்த ராஜபக்ச, கால் தடுக்கி, நிலைதடுமாறி கீழே விழப்போனார்.

அப்போது அருகில் இருந்த அவரது உதவியாளர்கள் தாங்கிப் பிடித்துக் கொண்டதால் நிலத்தில் அடிபடாமல் காப்பாற்றப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *