கோத்தாவுக்காக பிக்குகள் போராட்டத்தில் குதிப்பர் – எச்சரிக்கிறார் முறுத்தெட்டுவே ஆனந்த தேரர்
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்பட்டால், அதற்கு எதிராக கணிசமானளவு பௌத்த பிக்குகள் வீதியில் இறங்குவார்கள் என்று முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றி கருத்து வெளியிட்ட அவர்,
“இந்த அரசாங்கம் பெருமளவில் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆட்சியாளர்களின் பாவத்தினால் நாடு பேரழிவுகளைச் சந்திக்கும்.
மகிந்த ராஜபக்சவுடன் தொடர்புடையவர்களைப் பழிவாங்குவதை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இப்போது கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்ய முயற்சிக்கின்றனர். அவர் அரசியலில் இறங்குவார் என்ற அச்சத்தினால் தான் கைது செய்வதற்கு முயற்சிக்கின்றனர்” என்றும் அவர் தெரிவித்தார்.