தகவல் உரிமைச் சட்டத்தை சாத்தியமாக்கியதற்கு நிஷா பிஸ்வால் பாராட்டு
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தகவல் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டமைக்கு, தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் பாராட்டுத் தெரிவித்தார்.
இன்று சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல, அமைச்சர்கள் விஜேதாச ராஜபக்ச, சுசில் பிரேம் ஜெயந்த, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பில் அமெரிக்காவின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கியும் கலந்து கொண்டார்.
தகவல் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றுமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் அமெரிக்கா நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.