பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும் – ஐ.நா
பொறுப்புக்கூறல் தொடர்பான வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் நேற்று நடந்த நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பாக, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளரிடம் கேள்வி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “அதுதொடர்பாக சரியாக கருத்துக்களை நான் காணவில்லை. பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவது தொடர்பாக அனைத்துலக சமூகத்துக்கும், சிறிலங்காவுக்கும் இடையில் உடன்பாடுகள் உள்ளன. அவை பின்பற்றப்படும் என்று நம்புகிறோம்” என்று பதிலளித்துள்ளார்.