மேலும்

மாதம்: February 2026

முக்கிய வழக்குகள் குறித்து ஆலோசனை வழங்க உயர்மட்டக் குழு

முக்கியமான மற்றும் கடுமையான குற்றவியல் வழக்குகள் தொடர்பான விசாரணைகள் குறித்து, ஆலோசனை வழங்குவதற்காக, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தலைமையிலான ஒரு குழுவொன்றை சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க நியமித்துள்ளார்.

அமெரிக்க தடைக்கு மத்தியில் ஈரான் – சிறிலங்கா வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு

மேற்காசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பேச்சு நடத்தியுள்ளார்.

உலக வங்கி, அனைத்துலக நாணய நிதிய உயர் மட்டக்குழுக்கள் சிறிலங்கா வருகின்றன

2022-23 பொருளாதார நெருக்கடியால் தடைப்பட்ட பல திட்டங்களை மீண்டும் தொடங்குவது குறித்து, உலக வங்கி பிரதிநிதிகள் குழு ஆராயவுள்ளது.

சபாநாயகருக்கு எதிரான முறைப்பாடுகளை விசாரிக்க முடிவு

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான, முறைப்பாடு குறித்த விசாரணையைத் தொடங்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை  கைவிட வேண்டும்

சிறிலங்காவில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை  கைவிட வேண்டும் என்றும் அனைவருக்கும் நீதி (Justice for All) என்ற அனைத்துலக மனித உரிமை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா படை அதிகாரிகள் மீதான அனைத்துலக தடைகளை அரசாங்கம் ஏற்காது

சிறிலங்கா படை அதிகாரிகள் மீதான தடைகள் அனைத்துலக சட்டத்திற்கு முரணானது என்றும், இதனை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்றும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் ஜெய்சங்கருடன் ரில்வின் சில்வா சந்திப்பு

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, புதுடெல்லியில்  இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அவசரகாலச் சட்ட நீடிப்பிற்கு கஜேந்திரகுமார், செல்வம் மட்டும் எதிர்ப்பு

அவசரகாலச் சட்டத்தை  மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணை, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று  104 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீதிமன்றில் முன்னிலையாகாமல் நழுவும் கோட்டா- எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணையில், முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையாவதை தவிர்த்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிடம் இழப்பீடு கோர சிறிலங்கா திட்டம்

காலனித்துவ ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சொத்து சேதங்கள், திருட்டுகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு பிரித்தானிய அரசாங்கத்திடம் சிறிலங்கா இழப்பீடு கோரவுள்ளது.