மேலும்

நாள்: 25th February 2026

மண்டைதீவு துடுப்பாட்ட மைதான கட்டுமானப் பணி நிறுத்தப்படாது

யாழ்ப்பாணம் அனைத்துலக துடுப்பாட்ட மைதானத்தின் கட்டுமானத்தை நிறுத்துவதற்கு அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர்  நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது

சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவையின்  (SIS) முன்னாள் தலைவரான  மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2025இல் 1,062.8 மில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடு

2025 ஆம் ஆண்டில் சிறிலங்கா 1,062.8 மில்லியன் டொலர் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றுள்ளதாக சிறிலங்கா முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது. இதில் சிங்கப்பூரும் இந்தியாவும் முன்னணியில் உள்ளன.

ஒரு நாள் நிகழ்வுக்காக 11 மில்லியன் ரூபாவை கரைத்த சிறிலங்கா அதிபர்

தைப்பொங்கலுக்கு அடுத்த நாள், யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்ட ஒரு நிகழ்விற்காக, 11,079,075.50 (11 மில்லியன்) ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.