செம்மணியில் மேலும் 3 எலும்புக்கூடுகள் இனங்காணப்பட்டன
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழிகளில் இருந்து மேலும், 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மனிதப் புதைகுழிகளின் இரண்டாம் கட்ட அகழ்வின், 26ஆவது நாளான நேற்று, கண்டுபிடிக்கப்பட்ட 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளுடன் சேர்த்து, இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை, 118 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள், நேற்று முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன.
இதையடுத்து, முழுமையாக மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 105ஆக உயர்ந்துள்ளது.
இன்று தொடர்ந்து 27ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளன.