மேலும்

மாதம்: December 2019

கோத்தா கொலை முயற்சி வழக்கு – அரசியல் கைதிக்கு 14 ஆண்டுகளின் பின் விடுதலை

முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்வைக் கொலை செய்ய முயன்றார்  என்ற  குற்றச்சாட்டில் 14 ஆண்டுகள் சிறையில் இருந்த தமிழ்  அரசியல் கைதி ஒருவர், நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.

கடத்தல் குற்றச்சாட்டுடன் சுவிஸ் தூதரகத்துக்கு தொடர்பு இல்லை – கோத்தா

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக சுவிஸ் தூதரக பணியாளர் கூறிய குற்றச்சாட்டுடன், கொழும்பில் சுவிஸ் தூதரகம் தொடர்புபட்டிருக்கவில்லை  என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மார்ச் 3ஆம் நாள் நாடாளுமன்றம் கலைப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம் 2020 மார்ச் 3ஆம் நாளுக்குப் பின்னர் கலைக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜெனிவா அமர்வுக்குத் தயாராகும் சிறிலங்கா அரசாங்கம்

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்  மார்ச் மாத அமர்வின் போது  அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு மீளாய்வு செய்து வருகிறது.

சம்பிக்க கைது – அரசியல் பழிவாங்கல் அல்ல

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க  கைது செய்யப்பட்டுள்ளதில்,  எந்த அரசியலும் இல்லை என்றும், காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த  ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே,  அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள், எடுக்கப்படுவதாகவும், சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க முன் பிணை கோரி ராஜித மனு

தம்மைக் கைது செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடுமாறு கோரி, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் முன் பிணை கோரும் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

சம்பிக்க ரணவக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல்

வீதி விபத்தை ஏற்படுத்தி விட்டு, சாரதியின் மீது பழி போட்டு விட்டுத் தப்பிக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல் ஆரம்பம் –  அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்கள்

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்ட சம்பவம்,  புதிய அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உரிய நடைமுறைகளையே பின்பற்றுகிறோம் – சுவிசிடம் கூறிய சிறிலங்கா

சுவிஸ் தூதரகப் பணியாளர் மீதான விசாரணைகள் விடயத்தில், இரு நாடுகளும் மதிக்கும் அனைத்துலக விதிமுறைகளுக்கு இணங்க, ஒவ்வொரு கட்டத்திலும் உரிய செயல்முறைகள் பின்பற்றப்பட்டுள்ளது என, சுவிஸ் வெளிவிவகார அமைச்சரிடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சட்டமுறைகளுக்கு மாறாக நடந்த கைது

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்ட விவகாரத்தில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.