மேலும்

மார்ச் 3ஆம் நாள் நாடாளுமன்றம் கலைப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம் 2020 மார்ச் 3ஆம் நாளுக்குப் பின்னர் கலைக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அதிபர் செயலகத்தில் நேற்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

இதன்போதே அவர், நாடாளுமன்றம் வரும் மார்ச் 3ஆம் நாளுக்குப் பின்னர் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

அத்துடன் 19 ஆவது திருத்தச்சட்டம்  மிக மோசமான தவறு என்றும் குறிப்பிட்ட அவர், நாட்டின். எதிர்காலத்துக்கு இது ஒரு தடையாக இருக்கும் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *