மேலும்

கோத்தா கொலை முயற்சி வழக்கு – அரசியல் கைதிக்கு 14 ஆண்டுகளின் பின் விடுதலை

முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்வைக் கொலை செய்ய முயன்றார்  என்ற  குற்றச்சாட்டில் 14 ஆண்டுகள் சிறையில் இருந்த தமிழ்  அரசியல் கைதி ஒருவர், நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.

2006  டிசெம்பர் 1ஆம் நாள் கொள்ளுப்பிட்டி, பித்தல சந்தியில் கோத்தாபய ராஜபக்சவின் வாகன அணியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பாக, ஐந்து தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2013 டிசெம்பர் 4ஆம் நாள் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், நான்காவது எதிரியாக குற்றம்சாட்டப்பட்ட சந்திரபோஸ் செல்வச்சந்திரன் என்பவரையே,  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெற்றியாராச்சி நேற்று விடுதலை செய்தார்.

இருதரப்பு சாட்சியங்கள், சான்றுகளை ஆராய்ந்த பின்னர், இவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி வழக்கில் இருந்து நீதிபதி விடுவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *