மேலும்

சிறிலங்காவுக்கு குறைந்த நிதி ஒதுக்கீடு – இந்தியா மீது கொழும்பு வருத்தம்

இந்திய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தில், ஏனைய அண்டை நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட குறைந்தளவு நிதியே சிறிலங்காவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் இது குறித்து சிறிலங்கா வருத்தமடைந்துள்ளது என்றும் ‘இந்தியா ருடே’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடாக சிறிலங்கா விளங்குவதுடன், நூற்றாண்டுகளாக நெருங்கிய தொடர்புகளையும் கொண்டுள்ளது.

எனினும், மொறிசியஸ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கே இந்த ஆண்டில் இந்தியா அதிக நிதியை ஒதுக்கியுள்ளது.

கடந்த ஆண்டில் சிறிலங்காவுக்கு 150 கோடி இந்திய ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அது 250 கோடி ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மொறிசியசுக்கான நிதி ஒதுக்கீடு, 350 கோடி ரூபாவில் இருந்து, 1100 கோடி ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாலைதீவில் மொகமட் இப்ராகிம் சோலி அரசாங்கம் பதவிக்கு வந்துள்ள நிலையில், கடந்த ஆண்டு 125 கோடி ரூபா ஒதுக்கப்பட்ட நிதியை இந்த ஆண்டு 576 கோடி ரூபாவாக அதிகரித்துள்ளது இந்தியா.

இந்தியாவிடம் உதவி பெறும் நாடுகளில் பூட்டானை அடுத்து மொறிசியசுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நேபாளத்துக்கு அடுத்ததாக,  மாலைதீவு நான்காவது அதிகளவு நிதியைப் பெறுகிறது.

பூகோள முக்கியத்துவம் வாய்ந்ததாக சிறிலங்கா இருந்த போதும், இந்தியாவின் நிதி ஒதுக்கீட்டில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இருப்பதை, கொழும்பு அற்பமாக உணர்ந்ததாக அறியப்படுகிறது.

இந்தநிதி ஒதுக்கீடு “அதன் தேவைகளுக்கு ஏற்ப இல்லை” என்று கொழும்பு உணர்கிறது என்றும், உதவித் தொகையை இந்தியா மறு ஆய்வு செய்ய வேண்டும் என விரும்புகிறது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *