மேலும்

இரண்டாவது முறை இராணுவத் தளபதியை விசாரணைக்கு அழைக்கும் தெரிவுக்குழு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை இரண்டாவது தடவையாகவும் விசாரணைக்கு அழைத்துள்ளது.

தெரிவுக்குழுவின் அடுத்த அமர்வு வரும் 31ஆம் நாள் – புதன்கிழமை காலை இடம்பெறவுள்ளது. அன்றைய நாளே சிறிலங்கா இராணுவத் தளபதியை முன்னிலையாகும்படி தெரிவுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கபில வைத்யரத்னவையும் நாளை மறுநாள் சாட்சியமளிக்க முன்னிலையாகும்படி, தெரிவுக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *