மேலும்

நெதர்லாந்தில் சிறிலங்காவின் இரண்டு தூதுவர்கள்

நெதர்லாந்தில் தற்போது சிறிலங்காவின் இரண்டு தூதுவர்கள் இருப்பதாகவும், ஒருவர் அதிகாரபூர்வ வதிவிடத்திலும் மற்றொருவர் விடுதியிலும் தங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெதர்லாந்துக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட சுமித் நாகந்தல, ஹேக் நகருக்குச் சென்று பதவியைப் பொறுப்பேற்றுள்ள போதும், சிறிலங்கா தூதுவராகப் பணியாற்றியவரின் பணிக்காலம் முடிந்த பின்னரும், அதிகாரபூர்வ வதிவிடத்தை விட்டுக் கொடுக்காமல் அங்கேயே தங்கியுள்ளார்.

சுமித் நாகந்தல பல வாரங்களுக்கு முன்னரே, பணிகளைப் பொறுப்பேற்று விட்ட போதிலும், அதிகாரபூர்வ வதிவிடம் ஒப்படைக்கப்படாததால், விடுதியொன்றில் தங்கியுள்ளார்.

பதவிக்காலம் முடிந்த தூதுவரும், புதிய தூதுவரும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மூத்த இராஜதந்திரிகளாவர்.

இவர்கள் இருவருக்கும் இடையிலான முரண்பாடுகளினாலேயே, இந்த இழுபறி ஏற்பட்டுள்ளது,

பதவி விலகும் தூதுவருக்கு ஜூன் 19ஆம் நாள் தூதரகத்தின் சார்பில் பிரிவுபசார நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும், அவர் அதில் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *