மேலும்

உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல் – முன்னாள் புலனாய்வு அதிகாரி கைது

ரிவிர மற்றும் திவயின சிங்கள இதழ்களின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரியான கோப்ரல் லலித் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹன்வெல்லவில் உள்ள வீட்டில் நேற்றிரவு குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கோப்ரல் லலித் ராஜபக்ச இன்று கம்பகா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

இதையடுத்து அவரை, 21 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மருதானையில் உள்ள சர்ச்சைக்குரிய திரிப்பொலி இராணுவ முகாமின் பணியாற்றிய கோப்ரல் லலித் ராஜபக்ச பல்வேறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

2009 ஜனவரி 23ஆம் நான் கம்பகாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் உபாலி தென்னக்கோனும், அவரது மனைவியும் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *