மேலும்

விழிப்புடன் இருக்குமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவிப்பு

சிறிலங்காவில் உள்ள அமெரிக்க குடிமக்கள் ‘விழிப்புடன்’ இருக்குமாறும், பிந்திய பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெற, ஸ்மார்ட் டிராவலர் பதிவு திட்டத்தில் (STEP) பதிவு செய்யுமாறும் சிறிலங்காவில் உள்ள அமெரிக்க தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

“அருகிலுள்ள அமெரிக்க தூதரகம் அல்லது தூதரகத்திலிருந்து அண்மைய பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெற அனைத்து அமெரிக்க குடிமக்களும் http://step.state.gov இல் உள்ள ஸ்மார்ட் டிராவலர் பதிவு திட்டத்தில் (STEP) பதிவு செய்யுமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம்,” என்று அமெரிக்கத் தூதரகம் தனது சமூக ஊடகப் பக்கத்தில் அறிவித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களின் பாதுகாப்பை விட, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு வேறு அதிக முன்னுரிமை இல்லை.

அமெரிக்காவிற்குத் திரும்ப விரும்புவோருக்கு, மத்திய கிழக்குப் பகுதி வழியாக போக்குவரத்தைத் தவிர்க்கும், வணிக பயண தெரிவுகள் உள்ளன.

உங்கள் பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்டு, நீங்கள் தூதரக அதிகாரியுடன் பேச விரும்பினால், திங்கள் முதல் வியாழன் வரை, மதியம் 1:00 முதல் 2:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *