மேலும்

மாதம்: June 2019

அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்கா கடற்படை தளபதியுடன் ஆலோசனை

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ், சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவை, சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

சோபா உடன்பாட்டினால் சிறிலங்கா பிளவுபடும் – உதய கம்மன்பில

அமெரிக்காவுடன் சோபா உடன்பாடு, மிலேனியம் சவால் நிறுவனம்  போன்ற உடன்பாடுகளை செய்து கொள்வதால், அமெரிக்க- சீனா இடையிலான மோதல்களுக்கான களமாக சிறிலங்கா மாறி விடும் ஆபத்து உள்ளது என்று எச்சரித்திருக்கிறார் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.

சிறிலங்கா நாடாளுமன்ற பாதுகாப்புக்கு கருவிகளை வழங்கியது சீனா

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு  33 மில்லியன் ரூபா பெறுமதியான பாதுகாப்புக் கருவிகளை சீன அரசாங்கம் கொடையாக வழங்கியுள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகளின் சாட்சியங்கள் – இரகசியமாக பதிவு செய்ய தெரிவுக்குழு முடிவு

சேவையில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள், தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து சாட்சியம் அளிக்கும் போது, ஊடகங்களை அனுமதிப்பதில்லை என்று, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முடிவு செய்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கச் செயலரின் சிறிலங்கா பயணம் திடீரென ரத்து

அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்பு

சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் இருவர், மீண்டும் சற்று முன்னர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

அமைச்சரவையில் மயான அமைதி

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளை நிறுத்தாவிடின், அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தமாட்டேன் என்ற பிடிவாதத்தில் இருந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இறங்கி வந்துள்ளார்.

சிறிலங்கா அதிபரின் எதிர்ப்புக்கு மத்தியில் காவல்துறை அதிகாரிகள் தெரிவுக்குழுவில் சாட்சியம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் எதிர்ப்புக்கு மத்தியில், சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் இருவர் நேற்று சிறப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளித்துள்ளனர்.

சிறிலங்கா வந்துள்ள சீன அரசின் உயர்மட்டப் பிரதிநிதி

சீன அரசின் உயர்மட்டப் பிரதிநிதி ஒருவர், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, அரசியல் உயர்மட்டங்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு துறைமுகத்தில் இந்திய கடற்படையின் ‘ஐஎன்எஸ் ரன்வீர்’ போர்க்கப்பல்

இந்திய கடற்படையின் ‘ஐஎன்எஸ் ரன்வீர்’ என்ற போர்க்கப்பல் நேற்று நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.