மேலும்

நாள்: 20th January 2019

கூட்டமைப்பை பிளவுபடுத்தும் நோக்கம் இல்லை – விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டணியை பிளவுபடுத்தும் நோக்கம் தனக்குக் கிடையாது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்.னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

3 மாகாண சபைகளைக் கலைக்க அமைச்சரவைப் பத்திரம்

மூன்று மாகாணசபைகளை கலைத்து ஒரே நாளில் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

ஒற்றையாட்சித் தன்மையில் மாற்றம் இருக்காது – சிறிலங்கா பிரதமர் உறுதி

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவது ஒரு நீண்ட பயணமாக இருக்கும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் மோடியைச் சந்திக்கிறார் மகிந்த – புதுடெல்லியில் இருந்து அழைப்பு

சிறிலங்காவின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவை புதுடெல்லிக்கு வருமாறு, இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது.

சிறிலங்காவில் இராணுவத் தளம்  – அமெரிக்கா மறுப்பு

சிறிலங்காவில் தளம் அமைப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக வெளியாகிய செய்திகளை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளது.

லசந்தவின் மகள் சிறிலங்கா வந்தால் கொலையாளி யார் என்பதை கூறுவேன் – கோத்தா

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்தது யார் என்று தனக்குத் தெரியும் என்றும், ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை என்றும் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

400 பில்லியன் ரூபாவை நெருங்கும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செலவினம்

இந்த ஆண்டு பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 400 பில்லியன் ரூபாவை நெருங்கியுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 05ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திலேயே இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.

ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட கதிர்காமர் கொலை சந்தேக நபர் – காத்திருக்கும் சிறிலங்கா

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலையுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டவர் தொடர்பான தகவல்களுக்காக, காத்திருப்பதாக சிறிலங்கா தூதரகம் தெரிவித்துள்ளது.

ஐதேக வேட்பாளரை அறிவித்த பின்னரே தமது வேட்பாளரை அறிவிப்பாராம் மகிந்த

ஐக்கிய தேசியக் கட்சி அதிபர் வேட்பாளரை அறிவித்த பின்னரே, தமது தரப்பு வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பதிலுக்காக காத்திருக்கும் கோத்தா

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கான ஆவணங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.