சவேந்திர சில்வா நியமனத்தினால் பாதுகாப்பு ஒத்துழைப்பு பாதிக்கும் – அமெரிக்கா
சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக, போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்படும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதானது, அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு தலைவர் எலியட் ஏஞ்சல் தெரிவித்துள்ளார்.