மேலும்

ஒற்றையாட்சித் தன்மையில் மாற்றம் இருக்காது – சிறிலங்கா பிரதமர் உறுதி

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவது ஒரு நீண்ட பயணமாக இருக்கும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று நடந்த இரண்டு நிகழ்வுகளில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

”நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, புதிய அரசியலமைப்புக்கான யோசனைகள் அடங்கிய அறிக்கை, குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

இவை யோசனைகள் மாத்திரமே. அரசியலமைப்புக்கான வரைவு இன்னமுமும் தயாரிக்கப்படவில்லை.

புதிய அரசியலமைப்புக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரு்பான்மை ஆதரவு கிடைக்குமா என்பது நிச்சயமில்லை.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அதனை நிறைவேற்ற முடியாது.

புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த முனையவில்லை.

புதிய அரசியலமைப்பில்  நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையில் எந்த மாற்றமும் செய்யப்படாது.

ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதே ஐதேகவின் நிலைப்பாடு. நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையைப் பாதுகாக்க எந்தத் திட்டத்தை ஆதரிக்கவும் தயாராக இருக்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *