மேலும்

சிறிலங்காவில் இராணுவத் தளம்  – அமெரிக்கா மறுப்பு

சிறிலங்காவில் தளம் அமைப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக வெளியாகிய செய்திகளை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளது.

திருகோணமலையில் தளம் ஒன்றை அமைப்பதற்கு அமெரிக்காவுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதியளிக்கவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜெயசேகர நேற்று முன்தினம் குற்றம்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பேச்சாரள் நான்சி வான் ஹோர்ன்,

“சிறிலங்காவில் இராணுவத் தளத்தை நிறுவுவதற்கு அமெரிக்கா முயற்சித்து வருவதாக வெளியான தவறான செய்திகளை அமெரிக்க தூதரகம் அறிந்திருக்கிறது. இந்த செய்திகள் முற்றிலும் தவறானவை.

அதேவேளை, அமெரிக்க- சிறிலங்கா  இராணுவ ஒத்துழைப்பானது, அனர்த்த தயார் நிலை,  நிவாரணம், கடல் பாதுகாப்பு பயிற்சி, மற்றும் பயிற்சிகளை வலுப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளதே அன்றி, அமெரிக்காவின் தளம் ஒன்றை அமைப்பது, அதன் ஒரு அங்கமாக இருந்ததில்லை,

இதனை நிறுவுவது தொடர்பாக கலந்துரையாடல்களும் நடத்தப்படவில்லை.” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *