மேலும்

நாள்: 5th January 2019

முன்கூட்டியே அதிபர் தேர்தல் – தயாராகிறார் மைத்திரி

அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருவதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

5 புதிய ஆளுனர்கள் – வடக்கிற்கு இன்னமும் இல்லை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஐந்து மாகாணங்களுக்கு நேற்று மாலை புதிய ஆளுனர்களை நியமித்துள்ளார். மேல் மாகாண ஆளுனராக அசாத் சாலி நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுனராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

மிகின் லங்கா காரில் வலம் வந்த மகிந்தவின் சோதிடர்

மகிந்த ராஜபக்ச தனது தனிப்பட்ட சோதிடரின் பாவனைக்காக கார் ஒன்றை வழங்கியதன் மூலம், மிகின் லங்கா விமான நிறுவனத்துக்கு 8.2 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நாமல் குமாரவுக்கு வாய்ப்பூட்டு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்கு எந்த கருத்தையும் வெளியிடக் கூடாது என்று நாமல் குமாரவுக்கு நீதிவான் தடை விதித்துள்ளார்.

மகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் – சபாநாயகர் அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை ஏற்றுக் கொண்ட தமது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

மைத்திரி, ரணிலுக்கு சீன அதிபரின் தாமதமான வாழ்த்து

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த, சீனத் தூதுவர் செங் ஷியுவான், சீன அதிபரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை அவரிடம் நேரில் கையளித்துள்ளார். நேற்று முன்தினம், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஒரே வேட்பாளர் – மகிந்த

அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், சிறிலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து ஒரே வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.