மேலும்

நாள்: 21st January 2019

புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு

சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் இயக்கம் எழுச்சி பெற்ற ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பேணப்பட்டு வந்த 400 இராஜதந்திர கோப்புகளை அழித்திருப்பதாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் ஒப்புக்கொண்டுள்ளது.

‘எம்மை ஏன் கைவிட்டீர்கள்?’ – சிறிலங்கா அதிபரிடம் முல்லைத்தீவில் கேள்வி

‘எம்மை ஏன் கைவிட்டீர்கள்’ என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்வி எழுப்பி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று முள்ளியவளையில் போராட்டம் நடத்தினர்.

பளையில் முன்னாள் போராளி கைது

பளை – கரந்தாய் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர், பயங்கரவாத விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெடுங்கேணியில் இராணுவ வாகனம் கவிழ்ந்து மேஜர் உள்ளிட்ட 2 அதிகாரிகள் பலி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்புக்குச் சென்ற இராணுவ வாகனம், முல்லைத்தீவில் விபத்துக்குள்ளானத்தில், அதில் பயணம் செய்த மேஜர் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் பலியாகினர். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.

சிறிலங்கா அதிபரின் பிலிப்பைன்ஸ் பயணம் அரச நிதி வீணடிப்பு – ஹர்ஷ டி சில்வா

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸ் பயணம், எந்தத் திட்டமும் இன்று மேற்கொள்ளப்பட்டது என்றும், இதனால் அரசாங்கம் பயணம் விரயம் செய்யப்பட்டுள்ளதாகவும், பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது விநியோக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா குற்றம்சாட்டியுள்ளார்.

சேறு பூசக் காத்திருக்கும் ஊடகங்கள் – கட்சியினருக்கு விக்னேஸ்வரன் எச்சரிக்கை

தமிழ் மக்கள் கூட்டணி மீது சேறு பூச சில ஊடகங்கள் காத்திருப்பதாகவும், இவை குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்புக்கு ஆலோசனை வழங்க சிறிலங்கா வரும் பிலிப்பைன்ஸ் நிபுணர் குழு

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக, பிலிப்பைன்ஸ் நிபுணர்கள் குழுவொன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளது.

இராணுவப் பிடியில் இருந்த 3 விவசாயப் பண்ணைகள், 1201 ஏக்கர் காணிகள் இன்று விடுவிப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் வடக்கில் சிறிலங்கா இராணுவத்தின் வசமுள்ள மூன்று விவசாயப் பண்ணைகளை உள்ளடக்கிய 1201.88 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு செல்கிறார் சிறிசேன – எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஏற்பாடு

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வார நிகழ்வுகளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.